Saturday, December 24, 2011

ஓர் அந்தியில் என் நெஞ்சு
 
&
 
மார்கழி --8; சனிக்கிழமை ;
 
24.12.2011;
 
மாலை தேய்ந்து அந்தியின் அழகு -
 
பாலையாய் நெஞ்சு-
 
இளம் துளிர்ப்புகள் விழிக்குமா?
 
மொட்டை மாடி -
 
பரந்த திறந்த வானம் மௌனமாய் ;
 
செஞ்சிவப்பாய் அரை சூரியன் அமிழ்தலில் -
 
ஏதோ ஒரு சிறு சோகம் வானில் -
 
கையிலே தாகூரின் 'தோட்டக்காரன்'-
 
என்னுள் கனக்கிறேன் ;
 
நடக்கிறேன் இங்கும் அங்குமாய்-
 
நிகழ்வுகளை நெடிதாய் உறிஞ்சுகிறேன் ;
 
கீழ் வானத்து மேகங்களை
 
கடைசி நொடிக் கடைக்கண் காதற்பார்வையில்
 
கன்னம் சிவக்க வைக்கிறான் கள்ளமாய்க் கதிரவன் -
 
ஒரு புள்ளிபோல் ஜெட் விமானம்
 
தென் வடலாய் மேலைச் சரிவில்
 
வெள்ளி இரட்டை வால் குருவிபோல் அழகாய்ச் சறுக்குகிறது-
 
குளிர் காற்று சருமத்தின் நுண் துளைகள் வழியெல்லாம்
 
ஒரு 'சில்ல்ல்'ஐஇக் குத்திவிட்டுச் செல்கிறது அவசரம் அவசரமாய் -
 
மசூதிக் கோபுரத்தின் வழி நெஞ்சையே நெகிழ வைக்கும்
 
'வழிபாட்டு அழைப்பு ' வானுள் பொங்கி வழிகிறது -
 
'லா' ' வா' ' ஹூ' என்ற எழுத்தொலிகளுடன்
 
உடைவதுபோல் ஒட்டுவதாய்-
 
முடிவதுபோல் நிதானமாய்த் தொடர்வதுவாய்-
 
தாழ்வதுபோல் சட்டென உயர்வதுவாய் -
 
ஒரு உருகும் அழுகைக் கேவல் தாங்கி -
 
விண்ணுள் எழும்பி கடவுளையே சற்று அசைத்துவிடுவதாய் -
 
நெஞ்சைப் பிழிகிறது-
 
செவிகளில் பணிவு நிறைக்கிறது-
 
இமைகளை மூடித் தைக்கின்றது --
 
மெல்ல இருள் கசிகிறது ;
 
மேகங்கள் சாம்பல் பூக்கின்றன சோகத்தில் -
 
கைகள் கூம்புகின்றன -
 
நிலம் தாழ்ந்து வணங்குகிறேன் -
 
நெஞ்சில் பறந்து நிறையும் ஓர் மகோன்னத அமைதி -
 
"இறைவா !இந்த நொடி அமைதிக்கு நன்றி !"
 
வீட்டினுள் நுழைந்தால் கொசுக்களைவிடக் கவலைகளே சூழும் -
 
கொசுக்கள் சிறு புள்ளிகளாய் ரத்தம் மட்டும் தேடும் -
 
கவலைகளோ உயிரையே கேட்கும் -
 
மாலைகள் என்னை ஏமாற்றியதே இல்லை ;
 
என் பிச்சைப் பாத்திரத்தில் நிறைவாக என்றும் அருள்பவை ;
 
அந்தி வேளைகள் என் சிந்தையில் எண்ணிலாத் தாரகை சேர்ப்பவை-
 
ஓர் அந்தி வேளையே ஓர் நாள் என் அந்தி உயிர்ப்பாகட்டும் !
 
 
 
--சந்திர கலாதர்

Monday, December 5, 2011

இதென்ன கொலவெறி கொலவெறியோ /
&
மூன்று வயதுக் குழந்தைக்கு
இது மட்டும் புரிவதாயில்லை --
எதற்கு இந்த ப்ரீ -கேஜி ,எல் -கேஜி எல்லாம்?
இதென்ன கொலவெறி கொலவெறியோ ?
விழித்தது முதல் கண் விழுவோரை எல்லாம்
ஒரு பரிதாபக் கெஞ்சலுடன்
"இன்னிக்கு ஸ்கூல் இல்லை.. இல்லையாம்மா?
இல்லையாப்பா?என்ன தாத்தா ?
பாட்டீ! இல்லைதானே ?" எனும்
நம்பிக்கையற்ற குரலுடன்
'ஆம்' என்ற கிடைக்காத ஒரு சொல்லுக்காய் ஏங்கி
பாவம் என்னமாய்த் தவிக்கிறது !
அதை மீறி எல்லாமே மிதித்து நடக்கிறது -
இவர்கள் பாசம் எல்லாம் பொய்தானோ ?
கண்ணீரில் கரையாத கற்களோ இவர்கள் ?
முடியுமட்டும் முரண்டு பிடிக்கிறது -
ஒரே வாக்கியம்தான் திருப்பித் திருப்பிச் சலியாது--
"அம்மா ! இன்னிக்கி ஸ்கூல் இல்லேம்மா !"
கெஞ்சல் கொஞ்சல் மிரட்டல் ஆராதனைகள் பின்
ஆடைக்குள் திணிக்கப்பட்டதும்
வாழ்வே இருண்டு வாழ்வும் புரிந்து
கசாப்புக்கடை ஆடாய் கை இழுப்பில்
இல்லாத கொடிய ஸ்கூலுக்கு
வெறித்த விழியில் உயிரற்று நடக்கிறது !
-----சந்திர கலாதர்

Sunday, October 30, 2011

the kids of the world assemble...

the kids of the world assemble..!
&
the kids of the world assemble
at the edge of the seas,
hilarious in endless thrills
that sands and surf feed them with-
the seas reciprocate in more equal measure
to the charming calls and invite
of this innocent worriless world-
send their army of merry tiny waves
with frothy rolling laughter on their lips
to crash around their legs for infinite games
that grown-ups could never understand!
--s.chandra kalaadhar

i dreamt of yoking a blemishless horse of truth.

i dreamt of yoking a blemishless horse of truth.
&
at the threshold of my budding youth
i dreamt of yoking a blemishless horse of truth
to the chariot of my life on its journey through time
to adorn a life of divine bliss in its purest aspect
but, alas ! the valiant steed of 'truth' failed miserably
even to pull a few meters on its labyrinthine ways
and my chariot got stuck in the slush of suspicion
the music of joy gave way to whines of anger--
ready at hand were 'lies' of prime youth
in battle-trim for throw-away prices raring for risks-
they guided my life all in sprightly sprints--
now at my exit gate i look into my interiors ;
o how nasty and foul-smelling have i become !
--s.chandra kalaadhar

Friday, October 28, 2011

quit my gardens , o crows !

quit my gardens, o crows !
&
o noisy quarrelsome crows !
quit my gardens--
o birds of all feathers!
of different melodies!
of lonely bushes and thickets!
of far-away lands!
come here ! visit me!
grace my gardens and groves!
nay,all yours,your heavens!
no,ours !
sing singly; sing in chorus!
melt in sorrowful strains;
and in joyous tunes!
but o hoarse-throated crows!
vacate my gardens
and retreat to the forest !
---s.chandra kalaadhar

Monday, October 24, 2011

my equation is one gain to two losses

my equation is one gain to two losses !
&
unbelievables do happen
before my stunned gaze!
the bubbles of dreams of yesterdays
yes,they are buds of reality now !
i ask myself million times
' is it true ? am i awake and conscious ?
there can no more be disbelief--
two valiant silences tear away the mighty egos
and coo a melody of affection-
how could it be ?
' excuse me ; i have done you wrong all along'--
'o no..i have nothing in my mind '-
there is no hand shakes
but embrace of hearts in heavy silence!
no postmortems needed;
we are alive to love and affection;
we are no more in mortuary of hatred-
soft peace settles gracefully on my soul.
i salute god for the blessing
but god wears a mischievious smile
your equation is to be ever
one gain equals two losses-
yes ,the shocks of two bang on my heart !
i wither again in pain and grief
and say, 'everything must have a meaning
beyond the confines of my knowledge!'
o god when can my equation be
one loss to one gain?
-----s.chandra kalaadhar

Saturday, October 22, 2011

a dishonesty has crept in me.

a dishonesty has crept in me
&
a dishonesty has crept in me.
designs a lie in my mouth
enacts dramas with encounters imaginary,
dreads its vulnerabilities,
writes more scripts to cover up,
and more rehearsals within myself,
restless rollings on a wakeful fear,
the loud hammering of sounds of seconds,
suspicions flood my aching eyes,
and the brain soaks in sweat,
my conscience exiting me punches me hard--
o what a life! a single lie has bled me pale
at last i accept my lie gathering all boldness
now peace floods me with grace
and sleep showers soft blossoms on my soul !

---s.chandra kalaadhar

Wednesday, October 19, 2011

as i rode the chariot of age


as i rode the chariot of my age

i loved girls , all in flashes , beyond count

but torn away by my speed-
...
i was torched by their memories

but doused by my forgetfulness-

in such a fraction of a second of eyedash

i compacted epics of love in volumes-

i doubt i loved girls even as i roamed as a kid--

they never cease to be a wonder ;

create turbulance by dropping a glance !

o how unbearable is this pain !

one who is ever close to heart
and opens out baring all in total faith
has suddenly closed it tight
and gone lipless with far-away looks--
o how killing it is for both souls !
heart seems to outburst in concern
every nerve straining to send
unbearable ' rush-back-to-me ' messages
all moments souls interchanged
o what a wreckage we have become !
o heavenly angel,descend on us at once
take us in each of your hand
hold us both in the bosom of your heart-
o the pain is unbearable !

Friday, October 14, 2011

a child's plea

ஒரு குழந்தைக் குரல்
&
அம்மா !
சுத்தம் சுத்தம் என்று எப்போதும்
சத்தம் போடாதே --
அழுக்கு, அடம், அழுகை
இவைதான் பிடிக்கும் ;
தாய்ப்பால்,தாய்மண் வாசனையே
எனக்கு விருப்பம் ;
இந்த விருந்தே என் மருந்து
இது காலம் நீந்திவரும் உறவு !
எனது அடம் உனது அடியாகி
என் அழுகை உன் அணைப்பாக
அதிற்தான் எத்தனை சுகம் !
சுத்தம் சுத்தம் என்று
சத்தம் போடாதே !
----சந்திர கலாதர்

Wednesday, October 12, 2011

i and the nature

இயற்கையும் நானும்
&
குல்மோஹார் மலர்கள் ஓய்ந்து விட்டன ..
எண்ணி ஒன்றிரண்டே மலர்களும் மொட்டுகளும் ;
ஆனால் ஒளி தெறிக்கும் பசுமையில் மயிற்தோகைபோல் இளந்தளிர்கள் ..
கடைசி மலர்கள் ஏதாவது தனிமைச் சோகத்தில் தவிப்பனவோ ?
எதிர் வீட்டில் செண்டு செண்டாய் அடர்ந்த வேப்ப மகிழ்வுகள் !
ஒளியும் நிழலும் கைகோர்த்து உன்னத மாயைகள் ஜனிக்கும் பிரதேசங்கள் !
இதுவென்ன இளந்தளிர் மாதமோ ?
முருங்கை மரங்கள் வெண் நக்ஷத்திரங்களை அதன் பிரபஞ்ச வெளியில் கொட்டி வைத்துள்ளன .
காலைக் குளிர்வு ..வான் முகடுகளில் புரட்டாசி மழைக் கனவு மந்தைகள் .
உயரே வட்டமிடும் இலக்கற்ற ஹெலிகாப்ட்டர் தட்டாரப் பூச்சிகள் .
உயர உயரப் பறந்து இப்போது கிழிந்த கனவுகளாய் மரங்களில் சிக்கிய பட்டச் சிதைவுகள் கறைகள்போல்.
குயில்களின் தொண்டைகள் ஒட்டிக் கொண்டனவா ?
அவை கூவித் தேயத் தேவை வசந்த இளவரசனா ?
தடமே தெரியாது எங்கே இப்போது பதுங்கிக் கொண்டன ?
'விழுந்த இடத்தில் வாழ்ந்து விடு ' --என்ற சேதியை இந்த வேப்ப அரச மரக்கன்றுகள் கற்பிக்கின்றன .
என்ன நம்பிக்கை தைரியத்தில் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர் இண்டு இடுக்குகளில் முளைத்து
நிற்கின்றன ?
செங்கல் சுவர்களில் என்ன வாழ்வாதாரம் ?
எனினும் சோகித்து ஸ்தம்பித்து நிற்கவில்லையே !
எவரும் பாராதவரை வாழ்ந்து விடுவோம் எனும் துணிச்சலா ?
----சந்திர கலாதர் ...13.10.2011...காலை 06.45 மணி


--

Monday, October 10, 2011

the visit of a child

சிறு குழந்தையின் வருகை
&
தன் அப்பப்பாவை நாடி
என் மகன்மகன் சிறு பிள்ளை
முதல் முறையாய் மூன்று பிராயத்தில்
மூன்றாண்டுக்குப்பின் படைகொண்டு வந்தான்
ஓர் ஞாயிறில் சிறு ஞாயிறாய் -
வந்த உடனேயே என் மௌனம் பிடுங்கிச்
சுக்கு நூறாய்க் கிழித்து எறிந்தான் -
வலிக்காத வாடாத சொல் அம்புகளைச்
சளைக்காது என் மீது எய்தான் -
கொக்கரிக்கும் அவன் புதுச் சிரிப்பில்
என்னை எங்கோ அள்ளிச் சென்றான் -
கொப்பளிக்கும் அவன் குதலை மொழிக்கெல்லாம்
பிதற்றல் மொழிகள் என்னில் விடாது பிறந்தன --
கேள்விக்கெல்லாம் பட்டெனத்
தெளிவான பதில்கள் பாய்ந்தோடி வந்தன -
என்னை வென்று அடிமையாக்கி
சொற்கோல் கொண்டு குரங்காய்
மணிக்கணக்காய் ஆட்டிப் படைத்தான்-
சிறுவனே ,அயர்வே உனக்கிலையோ ?
நள்ளிரவும் கடந்ததே நா வலிக்கலையோ ?
தொண்டை காயலையோ ? விழி துவளலையோ ?
கொட்டாவி என் வாய் கிழிக்க
'மறுபடி மறுபடி ' எனும் உன் ஆணைகளால்
திரும்பத் திரும்ப ஓர் செயலையே செய்து செய்து
என் கை கால்கள் நோவெடுக்க
செய்வதறியாது ஏமாற்றவும் முடியாது
தவியாய்த் தவிக்கும் என் மீது கருணை காட்டினால் என் ?
கடைசியில் இறங்கி நீ உறங்க ஒப்பினாய்-
கண்ணா மணிவண்ணா இன்றுதான்
இரவு என் நெஞ்சில் சிறகு பறத்தி
நிம்மதியாய் உறங்குவதைத் தெற்றெனக் கண்டேன்
வாழ்க நீ வளர்க நீ என் உயிரே !
-----சந்திர கலாதர்

my grandkid's visit

my grandkid 's visit.
&
my three year old grandson
visited me at last this sunday
for one night stay
after three long years--
a glowing kid with winsome laughter
rolling out music of a hurrying rivulet-
it was full of pleasing sunshine
that dispelled the darkness of loneliness
from our aged hearts-
the kid calling me 'thaththaa' in all sweetness
stole away my time
and in all righteousness enslaved me
and held captive to all his commands--
my limbs ached and mouth yawned wide
but no mercy shown by this cheerful tyrant-
'once again' 'once again' were his endless verdicts
and he tongue-tied me with visible love-
i was repeating hundred times his chosen task-
and he never tolerated slippage of any sort-
it was past midnight
yet he refused his bed-
more and more strident grew his voice
more and more too was his pleading insistence-
'o god ,hurry the angel of sleep to my grandson'
as i stood helpless bereft of tricks to befool him --
when at last he slept on his own terms
showing semblance of mercy on a sweating soul--
o that night slept on me
with the veils of peace
dressing and decorating my heart !
s.chandra kalaadhar.

Monday, September 26, 2011

how is it ? how is it ?

********************************************************
எப்படி ? எப்படி ?
*******************************************************
தரை கூரை நமதின்றி அடுக்குமனையில்
ஓர் பெட்டி இடம் வாழ்நாளில் கொண்டதே
மேய்ப்பதில் இத்தனை சிரமங்கள் எனில்
ஊருக்கு தெருவுக்கு ஒன்றென வீடு வீடாய்
சிலர் சலியாமல் குவிப்பது எப்படி எப்படி ?
இரு சக்கர வண்டிகள் இரண்டிற்கு மேல் இருந்தாலே
மூச்சே திணறிப் போகையிலே
பெரும் பல்லக்கு வடிவ உல்லாச ஊர்திகள்
உருட்டி ஊர்வலம் பலர் வருவது எப்படி எப்படி?
ஒரு வேளை உணவிற்கே ஒரு நூறு பணம் தேடுதற்கே
ஒருவன் செத்துச் சுண்ணாம்பாகையிலே
ஒரு தேநீர் கூத்துக்கே குருட்டு அறைகளிலே
சொத்தையே அழிக்கத் துணிவது எப்படி எப்படி ?
இதுபோல் நான் நடக்கையிலே பார்க்கையிலே
ஓர் பொழுதில் எத்தனையோ எப்படி எப்படிக்கள் !
எண்ணி எண்ணியே என்னுள் சிக்கலாகிக் கந்தலாகி
நூலிழையில் சாலை விபத்தில் மீண்டு வீடு வீழ்ந்தேன் !
*********************************************************************************************************
-சந்திர கலாதர்
****************************

Sunday, September 25, 2011

i am a small star in the 'milky way'

'பால்வழியில்'நானும் ஒரு சிறு நக்ஷத்திரம்
*********************************************
'பால்வழி'யிலே பிரபஞ்சக் கோடானுகோடிகளில்   

நான் ஒரு சிறு நக்ஷத்திரம்--
என் பெயர் நீ அறியாய் ;உருவமும் கூட ;
தொலைவுகளில் தொலைந்து போனவர்கள் நாம் -
இருள் நிசப்தங்களில் இணையாது இழந்தவர்கள் -
உன் அண்மைகளைவிடவும் நான் பெரியவன் என்று
எப்படி எங்கு எப்போது உனக்குப் புரியும் ?
எதுவாயினும் பிரபஞ்ச வீதியிலே நானும் சிறு நக்ஷத்திரம்;
என் துடிப்புகளும் உயிர்ப்புகளும் எனக்குப் பெருமையே !
****************************************************************************************************************
--சந்திர கலாதர்
************************************
--

looking at grass

உன் உச்சந்தலையில்
 
உள்ளங்காலால் மிதிபட்டு
 
புல்லே ! நீ மெல்ல எழுகையில்
 
போதி மரத்துப் போதனை பெற்றேன் !
 
----சந்திர கலாதர்

Saturday, September 24, 2011

false decorations

பாராட்டுப் பொய்மைகள்
 
***************************
 
பாராட்டுப் பொய்மைகள் -
 
தாக்குண்டு தாக்குண்டு
 
உட்காயங்களில் நடக்கிறேன் -
 
பொய்த்திரைகள் மென்மேலாய்
 
என்னுள் இறங்கிட இறக்கிட
 
இதயத்தின் பார்வைகள்
 
தெளிவற்றுத் திரிந்தன -
 
'அறிஞன் கலைஞன் அற்புதன்'
 
ஆயிரம் பொய்மை 'போற்றிகள்' -
 
என் புகழில் ஊறி ஊறியே
 
அகம்பாவத்தில் அழுகி மிதந்தேன் -
 
திரைகளைக் கிழித்து
 
பொய்த் தலைகளைக் கொய்து
 
எனைக் காட்டிட விழைகையில்
 
ஏற்காது துரத்தும் எச்சில் எய்தல்கள் -
 
திரைகளின் வெம்மையில்
 
புழுங்கி வியர்த்தவன்
 
நிர்வாண நடைகளில்
 
இறக்கைகள் பெறுகிறேன் !
****************************************************
 
------------சந்திர கலாதர்
 
*****************************************

Wednesday, September 21, 2011

PUSH YOUR SECRETS TO DESOLATE CORNERS

PUSH YOUR SECRETS TO DESOLATE CORNERS
&
MY DEAR GIRL!
HAVE I NOT BARED MY HEART TO YOU
HOW I SURRENDERED MY WILL AND ALL
AT THE DARING BUT SUBLIME DARTS
FROM THE TWO BOLD STARS OF HER FACE
SENDING SILENT VIBRANT INVITATIONS
TO THE FESTIVAL OF ETERNAL SPRING IN HEAVEN?
HOW I SUFFERED INSURMOUNTABLE PAIN FOR MONTHS
AS DESTINY TOOK HER LOVING HEART AWAY
LOADED WITH MY PAIN TO ANOTHER BLESSED SOUL-
YOU CAME INTO MY LIFE JUST THEN
AS A FRESH BLOOM WITH STARTLING INNOCENCE,
WHEN THE GREAT PHYSICIAN 'TIME'TRIED
ALL ITS MEDICINES IN ITS ARMOURY
TO CURE ME THE SICKNESS OF HER DOTING EYES-
YOU HAD BEEN THE TIME'S NURSE
APPLYING KINDNESS ON MY WOUNDS
AND SHOWED ME THERE IS A LIFE BEYOND DISASTER-
WHY THEN IS A SILENT TREMOR IN YOUR HEART
THAT DENIES ME THE HOLDING OF YOUR PALMS
CLOSE TO MY CHEST,SCORCHING MY PEACE?
IS MY HONESTY ON A SLOW FIRE ALL THE WHILE
IN THE SECERT KITCHEN OF YOUR HEART?
O BOYS!TENDER SEX HAVE STEELY HEARTS!
AND PUSH TOUCHY SECRETS TO DESOLATE CORNERS!

&
-----S.CHANDRA KALAADHAR

Sunday, September 18, 2011

only due to fear,o my god !

வணங்குகிறேன் ...
 
&
 
வணங்குகிறேன்--
 
பயத்தினாற்தான் !
 
'நறுக்' எனக் குட்டுகிறாய்..
 
வலியின் ' விண் 'களில்
 
உன்னை உதறி எறிகிறேன்--
 
'பாவி' ..ஒன்றைக் கொடுத்துப்
 
பலதைப் பறிப்பவன் நீ !
 
புன்னகை தந்து
 
புலன்களைப் பறிப்பவன் நீ !
 
மறுபடி பேதலித்து
 
வணங்குகிறேன் -
 
மிகும் பயத்தினாற்தான் --
 
குட்டுவதோடு விட்டாயே ;
 
வெட்டிச் சாய்க்கவில்லையே !
 
நம்மிடை உறவுகள்
 
நிச்சயம்
 
அன்பினால் அல்ல
 
அச்சத்தினாற்தான்---
 
நன்றிக் கடனும்கூட
 
கடவுளே
 
அச்சத்தினாற்தான் !
 
&
 
சந்திர கலாதர்

when i was born

பிறக்கையில்
&
பிறக்கிறேன் ...
 
சமயம் பெயரானது
 
சாதி தலையானது
 
வகுப்பு பாதமானது
 
மனம் மதம்
 
பற்றிக் கொண்டது--
 
மனிதம் மட்டும்
 
என்னுள்
 
மறைந்து போனது .
-----சந்திர கலாதர்

Thursday, September 15, 2011

gulmohar's seed-pods

gulmohar's seed-pods
since the advent of spring season in april
crores of blossoms of gulmohar
in waves after waves turned the tree top
in riotous red carpeting the green--
it is september ; the tree looks plundered-
a few flowers here and there look weary too-
a hundred or so sheathed swords
tucked into the branches are seen !
o what then was the fate of
those millions of reds that shone bright ?
were they barren, mercilessly doomed to dust,
without a vision of their posterity?
o nature ! inscrutable are your ways !
----s.chandra kalaadhar

Tuesday, September 13, 2011

CASTE FIRE

சாதீ !
&
'சாதி '--
ஓர் ஈரெழுத்துப் பயங்கரம் !
'சாகாத தீ '--
சாதி வேடம் பூண்டதோ ?
சாதியின் உள்
'சதி' உண்டுதானே !
சாதி ...
எதைச் 'சாதி'த்தது ?
'மதி'யை மிதித்துத் துவைத்தது --
ரத்தச் சேற்றில் திளைத்தது !
சாதிச் சகதியில்
இந்தியாவே சிக்கித் தவிக்குது --
காற்றிலா வெற்றிடம் கூடும் ;
சாதியிலா நெஞ்சும் உண்டோ ?
எங்கும் எதிலும் இது --
அஹ்ரிணையும் அமிழ்ந்து  போனது --
சாதிப் பூ ...சாதி மல்லி
சாதிக் குதிரை ..சாதி வைரம் !
மேடை முழங்கினான் -
"சாதி என்போரே !
உன் விரல் அவன் விரல்
முள்ளால் குத்திப் பார் -
முத்தாய் முளைக்கும் ரத்தம்
இரண்டிலும் நிறம் ஒன்றே !
எங்கேயடா வேற்றுமை ?"
கூட்டத்தில் ஓர் குரல் -
"தலை ! உளறாதே !
ஏ ,பி ,ஏபி ,ஓ +,ஓ ~..
ரத்த சாதி தெரியாதா ?"
சாதி விதைப்பதிலே
வெறுப்பிட்டு வளர்ப்பதிலே
தத்தம் வேதங்களின்
ஆணிவேர் அறுப்பதிலே
எம்மதமும் 'சம'மதமே !
'கடவுளை ஒழி !'-
ஓயாது ஊளையிட்டு
வழிபடுதலங்கள் வளர்த்ததுபோல்
'சாதி ஒழிக!'--
மூச்சை  மறந்தாலும்
இப்பேச்சை மறக்காத
ஏமாற்று வித்தகர்கள்
ஊட்டிக் கொழுத்த சாதி --
ஊரையே மேய்கிறது ;
நாடு நிணம் நாறுகிறது !
எங்கு நுழைந்திடினும்
சாதியின் சாய் பார்வை ?
சொல்லாது போனால்
விடாத துப்புத் துலக்கம்--
படிப்பு ,வேலை ,சந்து பொந்து,
வீதி, மாவட்டம் ,எங்கணும்
சாதியின் கொடு 'வால்' !
ஊரெல்லாம் உருப்படாத
சாதிச் சிலைகள் --
கேடு கெட்ட பேரணிகள்
சாதி மார் தட்டி -
சாதிக் கத்தியால்
எதிலும் எங்கும் பல வெட்டு !
மாமேதை முதல்
படு அதமன் வரை
எண்ணத்தில் சாதிப் 'பேன் '
அடை அடையாய்--
சாதியால் வழக்கு கோடி-
வட்டாட்சியில் வட்டமிடும்
ஊழலும் பலகோடி -
கண்ணெல்லாம் காட்டுத் தீ !
உதடெல்லாம் எரிவாயு !
நெஞ்செல்லாம் நச்சு -
சாலையெல்லாம் சாம்பல் !
போதுமடா சா.தீ!
சாதிக்குச் சான்றிதழா ?
ஆணிவேர் அழிக்காது
சல்லி வேரிலும் சுகம் கண்டோம் !
பிஞ்சு நெஞ்சுகளில்
சாதி நுழைந்தது எப்போது ?
பள்ளியைச் சாதி
போர்த்திய நாள்தானே !
திருக்குறள் திருடர்கள்
வாக்குப் பிச்சைக்குச்
சாதி ஓடு ஏந்திய நாள்தானே !
சாதி பேசாது
எதிலும் வாய்ப்புகள் வளர்ப்போம் --
ஒழிக என்றால் ஒழியாது--
அசுரப் போட்டிகள் அழிந்தால்
சாதி மெல்லச் சாகும் !
-----சந்திர கலாதர்

Wednesday, September 7, 2011

A POEM BY TAGORE

HE COMES--THE HERO
&
He comes-the Hero !
The world vibrates ;
Grass blades thrill;
Conches blare in heaven;
Gongs sound on earth
This is the great birth !
Forts of moonless night
Shatter and fall apart .
Brimming with new hopes ,
Dawn on hiltops sings,
"Do not fear !do not fear !"
And the cosmos reverberates
"Hail the New Man!"
---RABINDRANATH TAGORE
அவன் வருகிறான் --
நாயகன் வருகிறான் !
உலகமே அதிர்கிறது !
புல்லிதழ்கள் பூரிக்கின்றன -
சுவர்க்க சங்கங்கள் முழங்குகின்றன -
மண்ணில் மணிகள் சப்திக்கின்றன -
ஆஹா ..பெரும் ஜனனம் இதுவல்லவோ !
நிலவற்ற இரவுக் கோட்டைகள்
தகர்ந்து பொடியாகின்றன --
புது நம்பிக்கைகள் பொங்கிட
"அஞ்சேல் ! அஞ்சேல்!" என
மலைச்சிகரங்களில்
'வைகறை ' பாடுகிறது -
"வாழ்க புது மனிதன்!"என
பிரபஞ்சம் எதிரொலிக்கின்றது .
&
மொழி மாற்றம் ...சந்திர கலாதர்

Sunday, September 4, 2011

MOTHER THERASA

அன்னை தெரசா
&
தெய்வமாய் நீ ---
கருணை முகம் காண்கிறேன்
கைகூப்பி நிற்கிறேன்--
ஆசி தரும் தெய்வமே
எனக்குக் கைகூப்பினால்--
மாசுடை நான்
திடுக்கிடுகிறேன் -
உன் கண்களின் அழைப்பு
என் பாதங்களின் தயக்கம்
நெருங்க முடியவில்லை தாயே !
என் கண்களில் கசிவுண்டு
ஆனால் அருட் பெருக்கில்லை --
சொல்லில் இதமுண்டு
ஆனால் செயலில் வளமில்லை-
உன்போல் கருணை
ஒரு சிலர்க்கே ஆகுமோ ?
----------சந்திர கலாதர்

Thursday, August 25, 2011

IN A TEMPLE SANCTUM SANCTORUM

உன் கோயில் கருவறை முன் ..!
&
இறைவா ..! இறைவியே ..!
கடவுளே என்பதைவிட தாயே தந்தையே எனத்
துணையாய் அழைப்பதில் நிம்மதியே தனி ---
தனித் தனியே ஏக்கங்களை ஏற்றபடி புலம்பி
விழி ஏரிகளை உடைத்து விடுவதில் ஓர் நிறைவு --
என் இல்லத்தில் சிறு பிறையில் தனிமைச் சந்திப்புகளை விட
கோயிலில் நின்ற திருக்கோலத்தில் கற்பூர தீபாராதனைகளில்
நெஞ்சு நெகிழ இரு கை பரப்பிப் பரவசமாய்ப்
பலரிடையும் என்னில் என்னுள் ஒன்றி நிற்பதில் சுகம் ---
நீங்கள் எட்டவே கருவறை இருளில்
கறுப்பாய்க் காலங்காலமாக கால்வலிக்க நின்றாலும் --
என் குறைநிறை கண்களின் பார்வை வீச்சில்
மெழுகி வைத்த ஒரு பாறைத் துண்டு எனவே தோன்றிடினும் --
இறை அருளோர் உன் அழகை அங்கம் அங்கமாய்த்
தம் பாமாலைகளில் தொடுத்து பரவசப் பட்டிருப்பினும் --
ஒன்றை நினைந்து நினைந்து நான் திகைத்துப் போகிறேன் --
உங்கள் எட்டாத பாதங்களை இங்கிருந்து எட்டி எட்டித் தொட்டிட
என் முந்தையோர் எத்தனை தலைமுறைகள் நிலம் வீழ்ந்து இருப்பர்--
தம் நெஞ்சில் தூசித் துளிகளை பிரசாதமாய் ஏற்று இருப்பர் !
பாத அரவிந்தங்களில் நம்பிக்கைகளை நட்டு இருப்பர்--
எத்தனை ராஜ கர்வங்கள் தலை தாழ்ந்து பணிந்து இருக்கும் !
எத்தனை பாபங்கள் பரிகாரம் தொழுதிருக்கும் !
உங்கள் முன் எத்தனை சரித்திரங்கள் திறந்து மூடியிருக்கும் !
எத்தனை இளமைகள் முதுமைக் கூன் பெற்று மடிந்து இருக்கும் --
ஆம் ..அமைதியாய் அனைத்திற்கும் நிலைக்களனாய்
எதனையும் எடுத்துரைக்காத ஓர் மர்மப் புன்னகையாய் --
இன்னும் பன்னூறு ஆண்டுகள் அழிவிலாது இப்படியே
எம் முன் அழிவுகளை ஆக்கங்களை அசையாத பார்வையோடு
நம்பிக்கை ஊற்றாய் நின்று இருப்போம் எனும் மொழி கேட்கிறது --
இந்தச் சிந்தனையில் என் குறை மறந்தும் நிம்மதியாய் வழி நடந்தேன்
-------சந்திர கலாதர்

DURING A NIGHT WHEN IT HEAVILY RAINED

[ஒரு பலத்த மழை அனுபவங்கள் உரைநடையாய் ]
நேற்று இரவு இந்த வலிமையான மழை என்னைத் தன் சுழலுள் மிகச் சிக்க வைத்துக் கொண்டது .--
அடர் மழையை ,மின்னல் வலிய சிறகுகளை, வெடிபடும் இடிகளை நுணுக்கமாகத் தியானித்தபடி இருந்தேன்--
வீட்டின் பாதுகாப்பில் மழைமின்னல் இடிகளையெல்லாம் பதிவு செய்தேன் --
காரணம் : மழையின் பேச்சு,இடிகளின் மிரட்டல் முனகல்கள் அனைத்திற்கும் மிகச் சரியான எழுத்து வடிவம் சமைக்கவே !
இந்த ஒலிகளையெல்லாம் வடிகட்டி வடிகட்டி செவித்தியானம் செய்தேன்-
இடிகள் தான் எத்தனை எழுத்துக்களில் தம்மை வெளிப்படுத்துகின்றன --கொட கொட கொட டுமு டுமு டுமு டம டம என்று பெரிதாய்
வானமே பொடிபடத் துவங்கி, மெல்ல மெல்ல ஒலியே சிறு பொடிகளாகி ,
சிறு தகர டப்பா போல வான வீ திகளில்உருண்டோடுகின்றன -
மின்னலின் வலிமைக்கு ஏற்றவாறு ஒலிகளின் ஏறு- இறங்கு-தொடர் சங்கிலிப் பிணைப்பு ---இடைவிடாது !
மழையோ பல குரல் மன்னன் --'சோ '..'சர சர'.'தட தட''டொட் டொட்'
என் விவரிப்பு எப்படிப் பண்ணிடினும் அது அந்த ஒலி அமைப்பு பக்கம்கூட நெருங்கவே முடியவில்லை--
எனவே நான் வெற்றி பெரும் வரை பதிவுகளை,மற்றும் இனி வரும் மழை இடிகளைக் கேட்ட வண்ணமேதான் இருப்பேன் !
மின்னல் என்னை எப்போதும் வியப்பில், ஆர்வத்தில் ,கட்டிபோடும் ,இழுத்துச் செல்லும் மகா மாயன் --
வான் பறவைகள் பல வடிவங்களில் சிறிது,பெரிது,மகாப் பெரிது என்றபடி,அழகாய்,ஆவேசமாய், அற்புதமாய்,அச்சமூட்டுபவையாய்
தத்தம் மெலிய, வலிய ஒளிச் சிறகுகள் விடாது படபடத்தபடி ,திக்கு எங்கினும் இறங்கி ,பறந்து.போரிட்டு, வான் வெளியையே வெள்ளிக் கோட்டை ஆக்கி ,மேக முந்தானைகளுள் ஓடி விளையாடி ..இன்னும் என்னவெல்லாம் கூற ..!
நான் மந்திரத்தால் கட்டுண்டு ஊமையாய் நின்றிருந்தேன் .
--------சந்திர கலாதர்

Tuesday, August 23, 2011

YEA...IT IS ONLY A BOX CAMERA ..!

அது ஒரு 'டப்பா' காமிராதான் ...!
&
அது ஒரு 'டப்பா' காமிரா தான் --
ஒரு கிட்டப் பார்வைக் கண்ணாடி
என்றும் கூடச் சொல்லலாமே !
ஆம்.. பழைய காலம்தான்--
அது வாயை மட்டும் திறந்து
வந்து விழுந்ததை விழுங்கும்
குருட்டு மனனம் செய்யும்
பள்ளி மாணவன் போல் !
கூர்ந்தும் நோக்காது-
'பளிச்' என மூளையில்
பதிந்தும் கொள்ளாது --
அதற்கே என்ன ' ஸ்டைல் ' செய்தோம்
ஹாலிவூட் திரைப்படம் எடுப்பது போல் --
உருட்டிப் புரட்டி சிலநாள் எடுத்தபின்னே
கடையில் கழுவக் கொடுத்து
தேர்வு எழுதிய மாணவன்போல்
'திக் திக்' எனத் தவம் கிடந்து பார்க்கையில்
எல்லாமே வெண் அல்லது கறுமேகங்கள்போல் !
எது எது யார் யார் என்றே புரியாது --
தெரிந்தாலோ எல்லாம் புள்ளி மயம் !
ஐம்பது ஆண்டுகள் ஆன படம்---
என்னோடு சேர்ந்து கிழண்ட படம் !
காலம் பசியில் தின்ற படம் -
மஞ்சள் நிறைவாய்க் குளித்த படம் !
அதில் இருப்பவர் சிலர்
உலகில் இல்லாத படம் !
எப்படி இருந்தால் நமக்கென்ன ?
எடுத்து பார்க்கையில் வெடிக்கும் பரவசத்தை
எழுத்தில் குரலில் இயன்றிடுமோ !
புது வெள்ளமாய் புரண்டிடும் நினைவுகள் -
பாசம் தோய்ந்த அப் பார்வைகள் -
அந்நொடியில் உறைந்திட்ட குறுஉரைகள் --
பின் புலமாய்த் திகழ் இயற்கைத் தோற்றங்கள் --
அசட்டுச் சிரிப்புக்கள் .விழி மூடல்கள் எனக்
காலத்தின் ஆழத்தில் நமை அழுத்தி
அந்நறுமணக் குழலை உட்செலுத்தி
இந்நொடிகளை மாலை மயக்கமாக்கிடுமே !
இதயம் பூவாய் மலர்ந்திடுமே !
விழிகளில் கண்ணீர் மொக்கிடுமே !
&
சந்திர கலாதர்

Saturday, August 20, 2011

fructified in silence and merged in your grandeur

மௌனத்தில் கனிந்தேன் .!

&
இளங்காலை நேரம்--
இந்த எளியவனை எதிரில் அமரச் சொல்கிறாய் ;
இமைத் திரை இறக்கச் சொல்கிறாய் -
"தியானி !"-
பணித்தலா ? பனித்தலா இது!
கட்டளையா ?
தென்றலின் தழுவலா ?
மென்மையாய் உன் குரல் ரீங்கரிக்கின்றது -
விழி விசிறிகளை நீயும் இறக்குகிறாய் !
தியான தீபம் உன்னில் சுடர் பூக்கின்றது -
தவழ் தென்றலில் மலர்களின் மாய மணம்
உயிரினை மூழ்கச் செய்கிறது -
காலம் சற்றுத் தவழ்கிறது -
என்னுள் இனம் புரியா ஒரு படபடப்பு ;
இமைகள் சிறகு விரிக்கின்றன !
என் விழிகளின் முன் உன் பேரழகு !
நிலவென வருடும் அமைதி -
கூசாத அலையாத ஒளி விரிவுகள் -
குழந்தையாய் உறங்கும் தியானம் !
உளமார ரசிக்கிறேன் -
கால மொட்டு எப்பொழுது கனியாயிற்று ?
தியானம் விழிக்கிறது -
"என்ன உண்மை கனிந்தது?" -வினவுகிறாய் -
உன் கேள்வி எனை மெல்ல வளைக்கிறது ;
என்ன சொல்வேன் ?
நாலாபுறமும் ஒரு நொடி
விடையைத் தேடி விழி பறக்கிறது !
மறுநொடி...
"மௌனத்தில் கனிந்தேன் ;
பேரழகில் கலந்தேன் !"
உன் முத்துச் சிரிப்பொலி
செவிகளிலே கலகலக்கிறது !
&
சந்திர கலாதர்

Friday, August 19, 2011

WHY EMPTY MY LIPS .?

ஏன் உதடுகளை வெறுமையாக்குகிறாய் ?
&
பச்சிளம் காலையிலும்
பழுத்த மாலையிலும்
உன்னைச் சந்தித்து அளவளாவ
கட்டுக் கடங்காப் பேராவலில்
பரபரப்பதைக் கண்ணுறும் இவர்கள்
" ஏ ! மூடா !
அவனைக் கண்டனையா ?
எங்கு எப்படி இருக்கிறான் ?"என
வினாச் சரங்களால் காயப்படுத்துகின்றனர் --
ஏளனங்களால் என்னைக்
கொத்தி எடுக்கின்றனர் -
&
தலைவனே !
தினமும் தவறாது சந்திக்கிறேன் அல்லவா?
மனமார உரையாடுகிறேன் இல்லையா ?
மகிழ்வில் திளைத்து ஆடுகிறேன் அல்லவா?
பின் ஏன் அந்த வினாக்கள்
என் தலையை
மண் பார்க்க மடித்து விடுகின்றன ?
அவ்வேளைகளில் ஏன்
என் வார்த்தைகளைப் பறித்து
உதடுகளை வெறுமையாக்கி விடுகிறாய் ?
&
சந்திர கலாதர்

INSIDE ME IS THE FESTIVAL OF LAMPS

என்னுள் இப்போது கார்த்திகைத் திருநாள் !
&
புகழ்க் கீதங்களில் கட்டிப் போட்டு விடலாம் என
நாளெல்லாம் பாடுகிறேன் ..
ரிஷிகள் மகாகவிகள் படைப்புகளை எல்லாம்
வேகாத நிவேதனமாய் உனக்குப் படைக்கிறேன்---
நீயோ --
என் புகழ் வலை நழுவி
மீனாய் நகைக்கிறாய் --
பேராசைகள் தோற்கின்றன ;
துன்பத்தில் சரிகிறேன் --
கண்ணில் துளிர்த்து
மண்ணிற் சிதறிய
கண்ணீர்த் துளிகளில்
நீ --
கைகொட்டிச் சிரிக்கிறாய் !
"அம்மா..!" என்கிறேன்
"அது போதும் !"என்கிறாய் -
தலை குனிகிறேன் --
"எது முடிகிறதோ..
அதிலே நிறைவேன் " என்கிறாய் -
ஆம்..
என்னுள் இப்போது
கார்த்திகைத் திருநாள் !
&
சந்திர கலாதர் ..

AUTUMN SEASON --A VIEW POINT

இலையுதிர் காலம்--ஓர் பார்வை
&
இலை உதிர் காலம்
தலை தூக்கி விடுகின்றது --
உறவுகள் இற்று அழிகின்றன ;
பந்தங்கள் பட்டுப் போகின்றன --
மரணமோ மகிழ்ச்சியாய்க்
குட்டிகரணம் போடுகிறது -
கண்கள் சொட்டுக்களாய்க் கரைகின்றன--
நினைவுகள் நலிகின்றன -
காதல் விம்முகிறது -
விதி சிரிக்கிறது ;
அனுபவம் கனிகிறது -
அறிவு தெளிகிறது -
துக்கம் நிர்வாணமாய்த் திரிகிறது ..!
&
சந்திர கலாதர்

IN THE TEMPLE OF MORNING...

காலைக் கோயிலின் மேகக் குடைகள் !
&
காலைக் கோயிலில்
மேகக் குடைகள் அழகாய் --
தென்னை விசிறிகளைக்
காற்று நேர்த்தியாய் அசைக்கிறது --
'காக ' பக்தர்களின்
'ஆ,கா..கா.' பிரவாகங்கள் !
குயிலின்..கரிச்சான்களின்
கொஞ்சு குழல் வாசிப்புகள் --
இந்த மங்கள முகூர்த்த வேளையில்
சூரிய தேவன் கிழக்கில்
சுடர் பொன் பறவைகளைப்
பறக்கவிட்டுப் புன்னகைத்தான் !
&
சந்திர கலாதர்

WHY PLAYFUL BOATS IN MY MISERIES ?

வேதனைகளில் வேடிக்கைப் படகுகள் ஏன் ?
&
ஏழ்மை விலங்கிடப்பட்டு
வெறுமை இருளோடு பிணைக்கப்பட்டிருக்கிறேன்--
உன் திருமேனி நீராட்ட வேண்டும் ;
சிங்காரித்து அழகு பார்க்கப்பட வேண்டும் என்ற ஆவல்
புதிதாய்ச் சிறகு முளைத்த சிறு பறவையாய்க்
கட்டுக்கடங்காது படபடக்கிறது --
ஆனால் ..சிறு குவளையும் என் வசம் இல்லை ;
விரல் குவிப்பிடையும் பெரும் ஒழுகல்கள் -
என் செய்வேன் /
என்னுள் பார்க்கிறேன் -
நெஞ்சிலே பாசப் பளிங்கோடை ;
விழிச் சிறு கலயங்களில் விளிம்பு ததும்ப
முகர்ந்து வருகிறேன் ;
ஆசை பொங்க நீராட்டுகிறேன் இரு விழிகளால் --
அது முத்துக்களாய் உன் மேனி பூத்துச் சிரிக்கின்றன !
கள்ளம் இன்றி நீ கலகலக்கிறாய்--
ஆம்..
வேதனை நதிகளில் வேடிக்கைப் படகுகள் ஓட்டி மகிழ்வதில்
உனக்கு ஏன் இந்தத் தணியாத ஆசை ?
என் வறுமைகளில் நிறைவையும்
ஏழ்மையில் சுகத்தையும்
எங்கே ஒளித்திருந்தாய் ?
&
சந்திர கலாதர்

Thursday, August 18, 2011

MY BEAUTIFUL TRAIN

அழகிய ரயிலே
&
குழந்தாய் ! இது --
ஆயிரம் கால்களின் நடனம்
அவசர ஆனந்த நடனம்
இரு கோடுகள் மீதான நடனம்
இடை ஆட்டிட வைக்கும் நடனம்
&
மேளங்கள் தாளங்கள் கொட்டும்
சலங்கை ஒலிகள் மிகக் கொஞ்சும்
ராகங்கள் ஏறி இறங்கித் திரியும்
பாடல்கள் பலவிதம் மாறும்
சோகம் வீழ்ந்தது போலும்
குரல் விசும்பி மிகத் தவிக்கும்
அனைவரும் உறங்கி விழினும்
இசை ஊற்றில் இதயம் ஆடும் .
&
இரவில் ஒற்றைக் கண் திறந்தே
மை இருளில் நீந்திப் போகும்
ஒரு ஊரை நெருங்கி விட்டால்
"ஊ"வெனக் "கூ"வெனக் கத்தும்
பெருமூச்செறிந்து கொண்டே
வயிற்று சுமைதனை வெளித் தள்ளும்
உடன் மிகுந்த பசி கொண்டே
ஒரு கூட்டத்தையே வாயுள் விழுங்கும் !
&
ஒற்றுமைச் சின்னமாய்க் கைகோர்த்தே
ஒன்றன் பின் ஒன்றாய் ஓடும்
திகட்டா உன் அழகே அழகு !
எத்தனை ஊர்திகள் இனி வரினும்
நெடிய உன்போல் அழகுண்டோ !
&
--சந்திர கலாதர்

Wednesday, August 17, 2011

WHY ARE THEY SO DIRTY..?

அவர்கள் ஏன்.ஏன்..?
&
அவர்கள் ...!
அழுக்காக இருக்கிறார்கள் --
ஆம் -
வேறு எப்படி இருக்க முடியும் ?
நம் அழுக்குகளையும் அல்லவா
அவர்கள் பூசிக் கொண்டு உள்ளார்கள் !
&
அவர்கள் ஏன் எப்போதும்
கூச்சலும் பூசலுமாய் ..?
ஆம் -
நம்மைப் போன்று
மௌன முகங்களிலே
வெறுப்பை பட்டை தீட்டச்
சற்றும் அறியாததால் ...!
&
அவர்கள் ஏன்
படிக்காது பாழாகிறார்கள்..?
ஆம் --
அவர்கள் எதிர் காலங்களையே
நாம் திருடிச் சென்று விட்டதால் ..!
&
அவர்கள் ஏன்
குடித்தே அழிகிறார்கள்..?
ஆம் --
வானங்களில் மயக்கங்களிலாவது
வளைய வருவதற்காக..!
&
---சந்திர கலாதர்

NATURE THROUGH MY EYES

என் விழிவழி இயற்கை
&
ஐப்பசி மழை ஓய்ந்து பத்து நாட்களாகி விட்டன ...
உலகம் எவ்வளவு பசுமையாய் விரிந்திருக்கிறது !
வானில் சூரிய ராகங்கள் இழைகின்றன ;
வெண்ணீல மேகங்கள் குதிர் குதிராய் அணி செய்கின்றன -
ஏரிப் பரப்புகளில் ஜோதி நடனங்கள் !
மரங்களில் எல்லாம் பச்சைத் தீபங்கள் அடர் சுடர் தெறிக்கின்றன ;
வானம் எவ்வளவு பரந்து விரிந்து பூமியை அணி செய்கிறது !
ஒவ்வொரு இல்லை முகத்திலும் சூரியப் புன்னகை -
எங்கும் வசீகரம் ! எதிலும் திமிரும் வனப்பு !
&
சந்தியா வேளையில் ' வெள்ளி '.. நெருப்புக் கொழுந்தாய் ....
மேலை வானில் உயர்ந்து இரவு ஏழரை மணி அளவில் அணைகிறது -
அஸ்தமனங்களை அழகு செய்யும் கரிய நேரிய பனஞ்சோலைகள்-
அந்த இடையனின் வாழ்வு எவ்வளவு இனிதாய் இருக்க வேண்டும் !
மனம் தளராத புற்பூண்டுகள் எங்கெங்கெல்லாம் முடியுமோ
அங்கெங்கெல்லாம் வளர்ந்து அழகைக் கொழிக்கின்றன --
அடை அடையாய்ப் பசுமை வண்ணமே !நீ வாடிப் போவாயே !
என்று எண்ணுகையிலேயே மனம் புண்ணாகிறது --
&
இறைவா !
பரந்த வானிலே பறக்க இறக்கைகள் தாயேன் !
&
இவர்களால் எப்படி ஆண்டு முழுவதும் கட்டிடங்களுக்கிடையில்
சிக்கி வாழ முடிகிறது ?
கட்டிடம் தேவை..ஆனால் கட்டிடப் பொறிகளில் மாட்டிக்கொண்டு
எப்படி வாழக் கூடும் ?
இவர்கள் சிறைப் பறவைகள் -
மரங்களைப் பாராது அதனில் தோயும் காற்றைச் சுவையாது--
சீ !காக்கை ஒன்றை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் -
மரச் சூழலற்ற வீட்டை என்னால் ஏற்கவே முடியாது;
சூரியனையே பார்க்காத மனிதர்கள் ...
இவர்கள் நக்ஷத்திரங்களையா பார்க்கப் போகிறார்கள் ?
இவர்கள் வானத்தில் மனை போட்டுத் தலைகீழாக வாழ்பவர்கள் அல்லவா..!
&
சந்திர கலாதர்
[20.11.1987 வெள்ளி காலை பஸ்ஸில் ]

--

when imagination is on a dreamy flight..

கற்பனை பறக்கையில் ...!
&
கச்சையாய்க் கட்டியது
கந்தலோ கிழிசலோ
கற்பனைப் பறவை
பொன்சிறகு பரப்பித்
தொடுவான் மிதக்கையில்
பசி என்ன ? அட !
வறுமைதான் என்ன ?
&
சந்திர கலாதர்
--

Tuesday, August 16, 2011

MOON THAT EVER FLOORS ME..!

நிலவே...நீ !
&
நிலவே--
வற்றாத கற்பனை வடிவே !
கூடி வரும் மேகங்கள்
ஓடி வந்து முத்தமிட்டு
நாடித் தழுவி நகருதே
நெஞ்சின்றி மிக மெதுவாய் --
கோடிக் கற்பனைகள் அவிழ்த்தனை ;
கோடிகள் பல இன்னும் படைப்பாய்-
செல்லும் வழி எல்லாம்
அழகை ஆடவிட்டாய் --
இரவின் காமத் தொப்புள் நீ !
மொட்டை மாடியில்
மௌன வீதிகளில்
வெள்ளமுதைக் கசிந்து
மெல்லப் பெருக விட்டாய் -
கூர் கத்தி கொண்டு
நெஞ்சுள் நுழைந்திடினும்
நெஞ்சில் சுவடும் இல்லை ;
செங்காயங்கள் ஏதும் இல்லை --
இரவின் தனிமையில்
இதயச் சிறகால் வருடியே
இமைகள் மயக்குகிறாய்
இன்பப் போதை ஏற்றுகிறாய் !
&
----சந்திர கலாதர்

Monday, August 15, 2011

UNABLE TO PREDICT THE WAYS OF THE WORLD

எதையும் கணிக்கத்தான் முடியவில்லை
&
சிறு வயதில் சிறு பொறியாய் சிறு மனதில் சில எண்ணங்கள்
ஆண்டுகள் பற்பல அணைந்து போயிடினும் அணையாமல்
நெடியதோர் கர்ப்பமாய் என்னுள்ளே விடாப்பிடியாய் வளர்ந்து
விதி குறித்த ஓர் நாளில் முழு வடிவில் விழித்து எழுந்து வீழ
என் ரத்தமும் சதையுமாய் எனையே அழுத்திக் குறுக்கியதாய்
ஹரிச்சந்திர வாக்குடன் எழில் ஏந்தும் மேனியாய் என் பெருமிதமாய் --
பார்வைகள் பல பட்டுப் பாராட்டைப் பெருக்கி வரும் என எண்ணுகையில்
சுவடுகளே இன்றி இவை சுருண்டு ஏக்கத்தில் எனை வீழ்த்தும் ;
வெறுமை எனைச் சுற்றும் தோல்வி கை தட்டிக் கொக்கரிக்கும் --
&
இதற்கிடையில் கொசுக்களின் கருத்தரிப்பாய் பல நூறு கற்பனைகள்
அனுதினமும் ஆங்காங்கே கொத்துக் கொத்தாய் பொரிபடவும்--
என் வியப்பாய் இவை எல்லாம் வெற்றி வாகை சூடி வரும் --
எதையுமே இவ்வுலகில் என்னால் கணிக்கத்தான் முடியவில்லை !
&
------சந்திர கலாதர்

Sunday, August 14, 2011

HOW TO ERASE ?

HOW TO ERASE ?
&
IS TOTAL ERASURE POSSIBLE ?
WHEN THE BODY IS INCINERATED
THE ASH REMAINS-
HOW THEN TO ERADICATE THE ASH ?
INCIDENTS DIE
BUT THE MEMORIES STICK ON--
HOW THEN TO ERASE THE MEMORIES ?
&
WHEN GOOD THINGS WANE
AS THE FOOTPRINTS OF THE BREEZE
THE PRESSURE OF VIOLENT THOUGHTS
AS CHISELLED PRINTS ON ROCK
REMAIN INDELIBLE IN THE RECESSES OF MEMORY--
IN THE DARKNESS OF THE NIGHT
AND DEEP IN THE NEST OF THE IRIS
MEMORIES GLOW IN RED HOT FLAMES--
HOW THEN TO ERASE MEMORIES?
&
S.CHANDRA KALAADHAR

HOW TO DESTROY ?

எப்படி அழிப்பது ?
HOW TO DESTROY ?
&
அழிப்பது முடியுமா ?
உடலை எரித்தால் சாம்பல் -
சாம்பலை எப்படி அழிப்பது ?
நிகழ்ச்சிகள் செத்த பின்
நினைவுகள்--
நினைவுகளை எப்படி அழிப்பது ?
&
தென்றலின் சுவடாய்
நல்லவை நலிய
வன்மத்தின் அழுத்தங்கள்
கற் செதுக்காய் நினைவில் --
இரவின் இருட்டிலும்
கருவிழியின் கூட்டிலும்
செங்கொழுந்தாய் நினைவுகள்--
நினைவுகளை எப்படி அழிப்பது ?
&
------சந்திர கலாதர்

NOT FORTUNATE ENOUGH YOUR FOOT TO LAND ON US

உன் பாதம்பட புண்ணியம் பண்ணலியே,அம்மா !
&
அம்மா !
இன்னமும் கொஞ்சம் இறந்த காலத்துக்குள்ள விழிச்சுப் பாக்கறேன் ...சுகமாத்தான் இருக்கு ...கொழந்தையா ..சின்னப் பையனா ...கொழல் டிராயர் போட்டுண்டு ..ஒன்னைச் சுத்திச் சத்தி வந்துண்டிருந்தேனே ..பொடவைத் தலைப்ப விடாமப் பிடிச்சிண்டு ..அப்பல்லாம் எப்பவாவது என்னைக் கடிஞ்சிண்டு இருக்கியான்னு பாக்கறேன் .
நெனப்புக் கூடத்தில ' ஞாபக ஒளி ' அடிச்சு இருட்டு மூலை மூலையாய்த் துருவித் தேடிப் பாக்கறேன் ..ஆனா அப்படி உக்ர சிற்பம்
ஒண்ணுகூடக் கண்ணுல இடற மாட்டேங்கறதே !
எப்படிம்மா ஒன்னால அடிக்காம எங்களை எல்லாம் ஆண்டாண்டா வளர்க்க முடிஞ்சுது ?
நாங்க ஒன்னும் கட்டிக் சமத்து இல்லையே ..அம்மா சொன்னதும் மௌனமா கையைக் காலைக் கட்டிண்டு ஒக்கார ...அடம் ,சண்டை ,குஸ்தி ,பிராண்டல் ,பிடுங்கல் ,ஓலம் , ஊளை எல்லாந்தான் உண்டே !
இருந்தாலும்கூட நீ முதுகில வெடிச்ச மாதிரி .காது மடலைக் கிழிச்ச மாதிரி ..கன்னத்துல கைய விட்டுட்டுப் போன மாதிரி ..ம்ஹூம்
ஒன்னுமே இல்ல .
ஒன்னே ஒண்ணுதான் ஞாபகத்துல இடறுது .." மிதிக்கட்டுமா ..மிதிக்கட்டுமா ! "ன்னு கொஞ்சம் கோபமா காலை எங்க தொடைக்குமேல உயர்த்துவ ..ஆனால் ஒன் பாதம் பட நாங்க புண்ணியம் எதுவும் பண்ணலியே !
&
சந்திர கலாதர்

Saturday, August 13, 2011

dumb joys

ஒன்றா இரண்டா ஊமை சந்தோஷங்கள் !
&
எல்லாமே நல்லபடியாய்த்தான் சென்றது
குடும்ப ரயில் எல்லோரோடும்
தண்டவாளத்தில் நன்றாகத் தான் ஓடியது;
வழிகாட்டி விளக்கு சுணங்கிப் போனதா இடையில் ?
எதிர் வண்டியோடு மோதித் தடம் புரண்டது ;
எனதின் ஒரு பகுதி எதிர் வண்டிக்குள் புகுகிறது-
என் பகுதி காயங்களுடன் மறு பாதைக்குள் நுழைகிறது
ரணங்களுடன் இரு வேறு பாதைகளில் பயணிக்கின்றன -
சந்திக்க இனி வாய்ப்புக்கள் எந்த நிலையத்திலோ என்றோ ?
வாழ்க்கை எதையும் ஜீரனிக்கப் பார்க்கிறது--
முடிகிறதா ? வழுக்குகிறதா ?வதை செய்கிறதா ?
&
கடந்ததின் பதிப்புகள் நிழற்படங்களாய்
என் முன் இறைந்து கிடக்கிறது --
விடை கொடுத்தாயிற்றே இன்னும் ஏன் இந்தக் கரிசனை ?
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கதை பின்புலமாய்--
ஒவ்வொரு உறைந்த நொடியிலும்
பதிப்பின் உணர்வு நதிகள் நினைவு புரண்டு தாக்குகின்றன --
" இதை ஒதுக்காதே ; இது தனித்தது ;உன்னோடு ஒன்றியது !" எனப்
பொல்லா மனம் புலம்பித் தவிக்கிறது --
அவன் அல்லது அவள் பொக்கை வாயாய்,பொன் சிரிப்பாய் ,
மழலை நதியாய், துள்ளு அணிலாய் , சிட்டுக் குருவியாய் ,
விளையாட்டுப் பம்பரமாய் ,வீம்பாய்,அழுகையாய் ,
அடமாய் , அடங்காப் பிடாரியாய் ,நாளொரு மேனியாய் ,
கொள்ளைப் பேச்சாய் , பள்ளிப் பாலகனாய் ,
ஆடை வனத் தேவனாய் ,அழகு மலராய் ,
கல்லூரித் தோழருடன் சுற்றுலா விடுதலையாய் ,
தோளையும் மீறிய வளரச்சியாய்,மீறிய பேச்சாய் ,
மணமேடை நாயகனாய் ,பின் மனமேடை அகன்றவனாய் --
ஓ..! எத்தனை அவதாரங்களாய் ?
மனம் ஒப்பவே இல்லையே !
வண்ணப் படங்களை மங்கியே போயினும் -
நினைவுகள்தான் மனப் பாறையில் கீறிப்போயினவே-
கணினியில் வன்பொருள் தகட்டில் அலசி ஏற்றுகிறேன் --
எனக்குத் தொடர்புண்டோ சற்றும் இல்லையோ --
அவனு[ளு ]க்கு உண்டாயின் அதுவே போதும்;
அவனே அதில் இல்லாது போயினும்
அவன் கை காமிரா அந்நேரம் ஏந்தி நுழைத்திருக்கும் ;
அது அல்லது அந்நண்பர்கள் அவனின் மகிழ்வு நாதங்கள் ;
அவன் கும்மாளத்தில் சிரிப்பில் எத்தனை சுவைகளோ ?
அவன் சிரிப்பில் என் இறைவனை அன்றோ
இம்முதுமையிலும் மனம் கண்டு கொள்கிறது --
வாலிபம் இதை இன்று கவனம் கொள்ளாது ;
பின் அசைபோடும் ஓய்வில்
நினைவு இனிப்பில் நனையும் ; முகம் மெல்லப் பூக்கும்--
அன்று ஓர் நொடி எனை நினைத்தாலும்
அதிலே ஆயிரம் சந்தோஷம் தானே !
ஒன்றா இரண்டா வாழ்க்கையில்
இந்த ஊமை சந்தோஷங்கள் !
&
------சந்திர கலாதர்

a poem by rabindranath tagore

BIRD,
பறவையே !
why do you forget your song sometimes ?
சில நேரங்களில் உனது பாடலை
ஏன் மறக்கிறாய் ?
why not sing on ?
பாடினால் என்ன ?
don't you know
how futile is a songless morning ?
இசையிலா புலர்காலை எத்தனை வீண் என்பதை
நீ அறிகிலையோ ?
the first fingers of dawn
trembling on tree leaves--
this is your song.
மலர் காலை தன் முதல் விரல்களால்
இலைத் தந்திகளில் மீட்டுகிறதே
அது உனது இசைதானே --
don't you know
you are the loved one of the morning ?
காலையின் அன்புச் சின்னம் நீயே என்பதும்
நீ அறியாயோ ?
the ' lakshmi ' of dawn
who offers gold to me on waking--
நான் விழிக்கையில் பொன்னை எனக்குப் பரிசாக்குவது
இளங்காலை எனும் ' திருமகள் ' அல்லவா ?
don't you know
it's time to offer her your song ?
இது நேரமே உன் கீதங்களை
அவளுக்குப் படைக்கும் தருணமல்லவா ?
இது நீ அறியாததா ?
after the dreams of a night of sorrow
comes the magic of your morning raga--
ஒரு துன்ப இரவின் கனவுகளின் பின்
உனது காலை இசையின் மாயம் தொடர்கிறது --
don't you know this is the song of new life ?
இதுவே புது வாழ்வின் பாடல் என்பது
நீ அறிகிலையோ ?
--rabindranath tagore.
[ மொழி மாற்றம் ...சந்திர கலாதர் ]