வணங்குகிறேன் ...
&
வணங்குகிறேன்--
பயத்தினாற்தான் !
'நறுக்' எனக் குட்டுகிறாய்..
வலியின் ' விண் 'களில்
உன்னை உதறி எறிகிறேன்--
'பாவி' ..ஒன்றைக் கொடுத்துப்
பலதைப் பறிப்பவன் நீ !
புன்னகை தந்து
புலன்களைப் பறிப்பவன் நீ !
மறுபடி பேதலித்து
வணங்குகிறேன் -
மிகும் பயத்தினாற்தான் --
குட்டுவதோடு விட்டாயே ;
வெட்டிச் சாய்க்கவில்லையே !
நம்மிடை உறவுகள்
நிச்சயம்
அன்பினால் அல்ல
அச்சத்தினாற்தான்---
நன்றிக் கடனும்கூட
கடவுளே
அச்சத்தினாற்தான் !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment