Sunday, September 18, 2011

only due to fear,o my god !

வணங்குகிறேன் ...
 
&
 
வணங்குகிறேன்--
 
பயத்தினாற்தான் !
 
'நறுக்' எனக் குட்டுகிறாய்..
 
வலியின் ' விண் 'களில்
 
உன்னை உதறி எறிகிறேன்--
 
'பாவி' ..ஒன்றைக் கொடுத்துப்
 
பலதைப் பறிப்பவன் நீ !
 
புன்னகை தந்து
 
புலன்களைப் பறிப்பவன் நீ !
 
மறுபடி பேதலித்து
 
வணங்குகிறேன் -
 
மிகும் பயத்தினாற்தான் --
 
குட்டுவதோடு விட்டாயே ;
 
வெட்டிச் சாய்க்கவில்லையே !
 
நம்மிடை உறவுகள்
 
நிச்சயம்
 
அன்பினால் அல்ல
 
அச்சத்தினாற்தான்---
 
நன்றிக் கடனும்கூட
 
கடவுளே
 
அச்சத்தினாற்தான் !
 
&
 
சந்திர கலாதர்

No comments:

Post a Comment