Friday, August 19, 2011

INSIDE ME IS THE FESTIVAL OF LAMPS

என்னுள் இப்போது கார்த்திகைத் திருநாள் !
&
புகழ்க் கீதங்களில் கட்டிப் போட்டு விடலாம் என
நாளெல்லாம் பாடுகிறேன் ..
ரிஷிகள் மகாகவிகள் படைப்புகளை எல்லாம்
வேகாத நிவேதனமாய் உனக்குப் படைக்கிறேன்---
நீயோ --
என் புகழ் வலை நழுவி
மீனாய் நகைக்கிறாய் --
பேராசைகள் தோற்கின்றன ;
துன்பத்தில் சரிகிறேன் --
கண்ணில் துளிர்த்து
மண்ணிற் சிதறிய
கண்ணீர்த் துளிகளில்
நீ --
கைகொட்டிச் சிரிக்கிறாய் !
"அம்மா..!" என்கிறேன்
"அது போதும் !"என்கிறாய் -
தலை குனிகிறேன் --
"எது முடிகிறதோ..
அதிலே நிறைவேன் " என்கிறாய் -
ஆம்..
என்னுள் இப்போது
கார்த்திகைத் திருநாள் !
&
சந்திர கலாதர் ..

No comments:

Post a Comment