உன் பாதம்பட புண்ணியம் பண்ணலியே,அம்மா !
&
அம்மா !
இன்னமும் கொஞ்சம் இறந்த காலத்துக்குள்ள விழிச்சுப் பாக்கறேன் ...சுகமாத்தான் இருக்கு ...கொழந்தையா ..சின்னப் பையனா ...கொழல் டிராயர் போட்டுண்டு ..ஒன்னைச் சுத்திச் சத்தி வந்துண்டிருந்தேனே ..பொடவைத் தலைப்ப விடாமப் பிடிச்சிண்டு ..அப்பல்லாம் எப்பவாவது என்னைக் கடிஞ்சிண்டு இருக்கியான்னு பாக்கறேன் .
நெனப்புக் கூடத்தில ' ஞாபக ஒளி ' அடிச்சு இருட்டு மூலை மூலையாய்த் துருவித் தேடிப் பாக்கறேன் ..ஆனா அப்படி உக்ர சிற்பம்
ஒண்ணுகூடக் கண்ணுல இடற மாட்டேங்கறதே !
எப்படிம்மா ஒன்னால அடிக்காம எங்களை எல்லாம் ஆண்டாண்டா வளர்க்க முடிஞ்சுது ?
நாங்க ஒன்னும் கட்டிக் சமத்து இல்லையே ..அம்மா சொன்னதும் மௌனமா கையைக் காலைக் கட்டிண்டு ஒக்கார ...அடம் ,சண்டை ,குஸ்தி ,பிராண்டல் ,பிடுங்கல் ,ஓலம் , ஊளை எல்லாந்தான் உண்டே !
இருந்தாலும்கூட நீ முதுகில வெடிச்ச மாதிரி .காது மடலைக் கிழிச்ச மாதிரி ..கன்னத்துல கைய விட்டுட்டுப் போன மாதிரி ..ம்ஹூம்
ஒன்னுமே இல்ல .
ஒன்னே ஒண்ணுதான் ஞாபகத்துல இடறுது .." மிதிக்கட்டுமா ..மிதிக்கட்டுமா ! "ன்னு கொஞ்சம் கோபமா காலை எங்க தொடைக்குமேல உயர்த்துவ ..ஆனால் ஒன் பாதம் பட நாங்க புண்ணியம் எதுவும் பண்ணலியே !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment