இலையுதிர் காலம்--ஓர் பார்வை
&
இலை உதிர் காலம்
தலை தூக்கி விடுகின்றது --
உறவுகள் இற்று அழிகின்றன ;
பந்தங்கள் பட்டுப் போகின்றன --
மரணமோ மகிழ்ச்சியாய்க்
குட்டிகரணம் போடுகிறது -
கண்கள் சொட்டுக்களாய்க் கரைகின்றன--
நினைவுகள் நலிகின்றன -
காதல் விம்முகிறது -
விதி சிரிக்கிறது ;
அனுபவம் கனிகிறது -
அறிவு தெளிகிறது -
துக்கம் நிர்வாணமாய்த் திரிகிறது ..!
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment