Monday, August 15, 2011

UNABLE TO PREDICT THE WAYS OF THE WORLD

எதையும் கணிக்கத்தான் முடியவில்லை
&
சிறு வயதில் சிறு பொறியாய் சிறு மனதில் சில எண்ணங்கள்
ஆண்டுகள் பற்பல அணைந்து போயிடினும் அணையாமல்
நெடியதோர் கர்ப்பமாய் என்னுள்ளே விடாப்பிடியாய் வளர்ந்து
விதி குறித்த ஓர் நாளில் முழு வடிவில் விழித்து எழுந்து வீழ
என் ரத்தமும் சதையுமாய் எனையே அழுத்திக் குறுக்கியதாய்
ஹரிச்சந்திர வாக்குடன் எழில் ஏந்தும் மேனியாய் என் பெருமிதமாய் --
பார்வைகள் பல பட்டுப் பாராட்டைப் பெருக்கி வரும் என எண்ணுகையில்
சுவடுகளே இன்றி இவை சுருண்டு ஏக்கத்தில் எனை வீழ்த்தும் ;
வெறுமை எனைச் சுற்றும் தோல்வி கை தட்டிக் கொக்கரிக்கும் --
&
இதற்கிடையில் கொசுக்களின் கருத்தரிப்பாய் பல நூறு கற்பனைகள்
அனுதினமும் ஆங்காங்கே கொத்துக் கொத்தாய் பொரிபடவும்--
என் வியப்பாய் இவை எல்லாம் வெற்றி வாகை சூடி வரும் --
எதையுமே இவ்வுலகில் என்னால் கணிக்கத்தான் முடியவில்லை !
&
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment