வேதனைகளில் வேடிக்கைப் படகுகள் ஏன் ?
&
ஏழ்மை விலங்கிடப்பட்டு
வெறுமை இருளோடு பிணைக்கப்பட்டிருக்கிறேன்--
உன் திருமேனி நீராட்ட வேண்டும் ;
சிங்காரித்து அழகு பார்க்கப்பட வேண்டும் என்ற ஆவல்
புதிதாய்ச் சிறகு முளைத்த சிறு பறவையாய்க்
கட்டுக்கடங்காது படபடக்கிறது --
ஆனால் ..சிறு குவளையும் என் வசம் இல்லை ;
விரல் குவிப்பிடையும் பெரும் ஒழுகல்கள் -
என் செய்வேன் /
என்னுள் பார்க்கிறேன் -
நெஞ்சிலே பாசப் பளிங்கோடை ;
விழிச் சிறு கலயங்களில் விளிம்பு ததும்ப
முகர்ந்து வருகிறேன் ;
ஆசை பொங்க நீராட்டுகிறேன் இரு விழிகளால் --
அது முத்துக்களாய் உன் மேனி பூத்துச் சிரிக்கின்றன !
கள்ளம் இன்றி நீ கலகலக்கிறாய்--
ஆம்..
வேதனை நதிகளில் வேடிக்கைப் படகுகள் ஓட்டி மகிழ்வதில்
உனக்கு ஏன் இந்தத் தணியாத ஆசை ?
என் வறுமைகளில் நிறைவையும்
ஏழ்மையில் சுகத்தையும்
எங்கே ஒளித்திருந்தாய் ?
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment