நிலவே...நீ !
&
நிலவே--
வற்றாத கற்பனை வடிவே !
கூடி வரும் மேகங்கள்
ஓடி வந்து முத்தமிட்டு
நாடித் தழுவி நகருதே
நெஞ்சின்றி மிக மெதுவாய் --
கோடிக் கற்பனைகள் அவிழ்த்தனை ;
கோடிகள் பல இன்னும் படைப்பாய்-
செல்லும் வழி எல்லாம்
அழகை ஆடவிட்டாய் --
இரவின் காமத் தொப்புள் நீ !
மொட்டை மாடியில்
மௌன வீதிகளில்
வெள்ளமுதைக் கசிந்து
மெல்லப் பெருக விட்டாய் -
கூர் கத்தி கொண்டு
நெஞ்சுள் நுழைந்திடினும்
நெஞ்சில் சுவடும் இல்லை ;
செங்காயங்கள் ஏதும் இல்லை --
இரவின் தனிமையில்
இதயச் சிறகால் வருடியே
இமைகள் மயக்குகிறாய்
இன்பப் போதை ஏற்றுகிறாய் !
&
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment