ஏன் உதடுகளை வெறுமையாக்குகிறாய் ?
&
பச்சிளம் காலையிலும்
பழுத்த மாலையிலும்
உன்னைச் சந்தித்து அளவளாவ
கட்டுக் கடங்காப் பேராவலில்
பரபரப்பதைக் கண்ணுறும் இவர்கள்
" ஏ ! மூடா !
அவனைக் கண்டனையா ?
எங்கு எப்படி இருக்கிறான் ?"என
வினாச் சரங்களால் காயப்படுத்துகின்றனர் --
ஏளனங்களால் என்னைக்
கொத்தி எடுக்கின்றனர் -
&
தலைவனே !
தினமும் தவறாது சந்திக்கிறேன் அல்லவா?
மனமார உரையாடுகிறேன் இல்லையா ?
மகிழ்வில் திளைத்து ஆடுகிறேன் அல்லவா?
பின் ஏன் அந்த வினாக்கள்
என் தலையை
மண் பார்க்க மடித்து விடுகின்றன ?
அவ்வேளைகளில் ஏன்
என் வார்த்தைகளைப் பறித்து
உதடுகளை வெறுமையாக்கி விடுகிறாய் ?
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment