Friday, October 14, 2011

a child's plea

ஒரு குழந்தைக் குரல்
&
அம்மா !
சுத்தம் சுத்தம் என்று எப்போதும்
சத்தம் போடாதே --
அழுக்கு, அடம், அழுகை
இவைதான் பிடிக்கும் ;
தாய்ப்பால்,தாய்மண் வாசனையே
எனக்கு விருப்பம் ;
இந்த விருந்தே என் மருந்து
இது காலம் நீந்திவரும் உறவு !
எனது அடம் உனது அடியாகி
என் அழுகை உன் அணைப்பாக
அதிற்தான் எத்தனை சுகம் !
சுத்தம் சுத்தம் என்று
சத்தம் போடாதே !
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment