Thursday, August 18, 2011

MY BEAUTIFUL TRAIN

அழகிய ரயிலே
&
குழந்தாய் ! இது --
ஆயிரம் கால்களின் நடனம்
அவசர ஆனந்த நடனம்
இரு கோடுகள் மீதான நடனம்
இடை ஆட்டிட வைக்கும் நடனம்
&
மேளங்கள் தாளங்கள் கொட்டும்
சலங்கை ஒலிகள் மிகக் கொஞ்சும்
ராகங்கள் ஏறி இறங்கித் திரியும்
பாடல்கள் பலவிதம் மாறும்
சோகம் வீழ்ந்தது போலும்
குரல் விசும்பி மிகத் தவிக்கும்
அனைவரும் உறங்கி விழினும்
இசை ஊற்றில் இதயம் ஆடும் .
&
இரவில் ஒற்றைக் கண் திறந்தே
மை இருளில் நீந்திப் போகும்
ஒரு ஊரை நெருங்கி விட்டால்
"ஊ"வெனக் "கூ"வெனக் கத்தும்
பெருமூச்செறிந்து கொண்டே
வயிற்று சுமைதனை வெளித் தள்ளும்
உடன் மிகுந்த பசி கொண்டே
ஒரு கூட்டத்தையே வாயுள் விழுங்கும் !
&
ஒற்றுமைச் சின்னமாய்க் கைகோர்த்தே
ஒன்றன் பின் ஒன்றாய் ஓடும்
திகட்டா உன் அழகே அழகு !
எத்தனை ஊர்திகள் இனி வரினும்
நெடிய உன்போல் அழகுண்டோ !
&
--சந்திர கலாதர்

No comments:

Post a Comment