Sunday, September 4, 2011

MOTHER THERASA

அன்னை தெரசா
&
தெய்வமாய் நீ ---
கருணை முகம் காண்கிறேன்
கைகூப்பி நிற்கிறேன்--
ஆசி தரும் தெய்வமே
எனக்குக் கைகூப்பினால்--
மாசுடை நான்
திடுக்கிடுகிறேன் -
உன் கண்களின் அழைப்பு
என் பாதங்களின் தயக்கம்
நெருங்க முடியவில்லை தாயே !
என் கண்களில் கசிவுண்டு
ஆனால் அருட் பெருக்கில்லை --
சொல்லில் இதமுண்டு
ஆனால் செயலில் வளமில்லை-
உன்போல் கருணை
ஒரு சிலர்க்கே ஆகுமோ ?
----------சந்திர கலாதர்

No comments:

Post a Comment