காலைக் கோயிலின் மேகக் குடைகள் !
&
காலைக் கோயிலில்
மேகக் குடைகள் அழகாய் --
தென்னை விசிறிகளைக்
காற்று நேர்த்தியாய் அசைக்கிறது --
'காக ' பக்தர்களின்
'ஆ,கா..கா.' பிரவாகங்கள் !
குயிலின்..கரிச்சான்களின்
கொஞ்சு குழல் வாசிப்புகள் --
இந்த மங்கள முகூர்த்த வேளையில்
சூரிய தேவன் கிழக்கில்
சுடர் பொன் பறவைகளைப்
பறக்கவிட்டுப் புன்னகைத்தான் !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment