அவர்கள் ஏன்.ஏன்..?
&
அவர்கள் ...!
அழுக்காக இருக்கிறார்கள் --
ஆம் -
வேறு எப்படி இருக்க முடியும் ?
நம் அழுக்குகளையும் அல்லவா
அவர்கள் பூசிக் கொண்டு உள்ளார்கள் !
&
அவர்கள் ஏன் எப்போதும்
அவர்கள் ஏன் எப்போதும்
கூச்சலும் பூசலுமாய் ..?
ஆம் -
நம்மைப் போன்று
மௌன முகங்களிலே
வெறுப்பை பட்டை தீட்டச்
சற்றும் அறியாததால் ...!
&
அவர்கள் ஏன்
படிக்காது பாழாகிறார்கள்..?
ஆம் --
அவர்கள் எதிர் காலங்களையே
நாம் திருடிச் சென்று விட்டதால் ..!
&
அவர்கள் ஏன்
குடித்தே அழிகிறார்கள்..?
ஆம் --
வானங்களில் மயக்கங்களிலாவது
வளைய வருவதற்காக..!
&
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment