'பால்வழியில்'நானும் ஒரு சிறு நக்ஷத்திரம்
*********************************************
'பால்வழி'யிலே பிரபஞ்சக் கோடானுகோடிகளில்
நான் ஒரு சிறு நக்ஷத்திரம்--
என் பெயர் நீ அறியாய் ;உருவமும் கூட ;
தொலைவுகளில் தொலைந்து போனவர்கள் நாம் -
இருள் நிசப்தங்களில் இணையாது இழந்தவர்கள் -
உன் அண்மைகளைவிடவும் நான் பெரியவன் என்று
எப்படி எங்கு எப்போது உனக்குப் புரியும் ?
எதுவாயினும் பிரபஞ்ச வீதியிலே நானும் சிறு நக்ஷத்திரம்;
என் துடிப்புகளும் உயிர்ப்புகளும் எனக்குப் பெருமையே !
****************************************************************************************************************
--சந்திர கலாதர்
************************************
--
--
No comments:
Post a Comment