Thursday, August 25, 2011

DURING A NIGHT WHEN IT HEAVILY RAINED

[ஒரு பலத்த மழை அனுபவங்கள் உரைநடையாய் ]
நேற்று இரவு இந்த வலிமையான மழை என்னைத் தன் சுழலுள் மிகச் சிக்க வைத்துக் கொண்டது .--
அடர் மழையை ,மின்னல் வலிய சிறகுகளை, வெடிபடும் இடிகளை நுணுக்கமாகத் தியானித்தபடி இருந்தேன்--
வீட்டின் பாதுகாப்பில் மழைமின்னல் இடிகளையெல்லாம் பதிவு செய்தேன் --
காரணம் : மழையின் பேச்சு,இடிகளின் மிரட்டல் முனகல்கள் அனைத்திற்கும் மிகச் சரியான எழுத்து வடிவம் சமைக்கவே !
இந்த ஒலிகளையெல்லாம் வடிகட்டி வடிகட்டி செவித்தியானம் செய்தேன்-
இடிகள் தான் எத்தனை எழுத்துக்களில் தம்மை வெளிப்படுத்துகின்றன --கொட கொட கொட டுமு டுமு டுமு டம டம என்று பெரிதாய்
வானமே பொடிபடத் துவங்கி, மெல்ல மெல்ல ஒலியே சிறு பொடிகளாகி ,
சிறு தகர டப்பா போல வான வீ திகளில்உருண்டோடுகின்றன -
மின்னலின் வலிமைக்கு ஏற்றவாறு ஒலிகளின் ஏறு- இறங்கு-தொடர் சங்கிலிப் பிணைப்பு ---இடைவிடாது !
மழையோ பல குரல் மன்னன் --'சோ '..'சர சர'.'தட தட''டொட் டொட்'
என் விவரிப்பு எப்படிப் பண்ணிடினும் அது அந்த ஒலி அமைப்பு பக்கம்கூட நெருங்கவே முடியவில்லை--
எனவே நான் வெற்றி பெரும் வரை பதிவுகளை,மற்றும் இனி வரும் மழை இடிகளைக் கேட்ட வண்ணமேதான் இருப்பேன் !
மின்னல் என்னை எப்போதும் வியப்பில், ஆர்வத்தில் ,கட்டிபோடும் ,இழுத்துச் செல்லும் மகா மாயன் --
வான் பறவைகள் பல வடிவங்களில் சிறிது,பெரிது,மகாப் பெரிது என்றபடி,அழகாய்,ஆவேசமாய், அற்புதமாய்,அச்சமூட்டுபவையாய்
தத்தம் மெலிய, வலிய ஒளிச் சிறகுகள் விடாது படபடத்தபடி ,திக்கு எங்கினும் இறங்கி ,பறந்து.போரிட்டு, வான் வெளியையே வெள்ளிக் கோட்டை ஆக்கி ,மேக முந்தானைகளுள் ஓடி விளையாடி ..இன்னும் என்னவெல்லாம் கூற ..!
நான் மந்திரத்தால் கட்டுண்டு ஊமையாய் நின்றிருந்தேன் .
--------சந்திர கலாதர்

No comments:

Post a Comment