Wednesday, August 10, 2011

EARLY DAWN

உஷத் காலை
[ EARLY DAWN ]
&
வெள்ளை முகிற் பறவையினம் வெண்ணிலவை அணைத்திருக்க -
கள்ளமொழித் தாரகைகள் கண் விழித்துப் பார்த்திருக்க --
கீழ்த் திசையில் வெள்ளை ஒளி நீலவானைத் தொட்டெழுப்ப --
மெல்லவரும் குளிர் காற்று கிசுகிசுத்துத் தடவிடவே
நிலமகளும் விழித்திட்டாள் மெதுவாகத் தெளிவுற்றாள் !
&
காதல் மேக நெஞ்சத்திலே ஆசையொளி ஊற்றிவிட்டு
காதல் தந்த போதையிலே காவியங்கள் கண்ணியற்ற
முயங்கிவிட்ட பெண் நிலவும் வெட்கம் மிகப் பொங்கிவர --
மயங்கிவிட்ட ஆண்முகிலின் அன்புக் கர அணைப்பினின்று
விடுபட்டு உடன் விலகி நின்று வெள்ளை ஒளி வதனமதை
மஞ்சள் வெட்கத் திரை போர்த்தாள் மௌனத்தில் மிக நலிந்தாள் !
&
மேலைத்திசை மூலையிலே நேற்று மாலைக் கதிர் இறங்கக்
கனிவுமிகப் பறந்தவாறு மேற்திசையிற் கூடிநின்று
வழியனுப்பி விடைபெற்ற அச்சிறு பறவைக் கூட்டம்
இன்று வெள்ளை ஒளி வான் தழுவி ஒண்கதிரோன் வரவுசொல
கீழ்த்திசை கூடகன்று காற்றில் ஏறிக் கரம் பரப்பிக்
காலைத்தேவன் கதிர் அரசைக் கோலமிகு இன்குரலாலே
வாழ்த்துப் பாடி வரவு வேண்ட வான் நிறையப் பறந்து சென்று
வயல்வெளி நிறைக்குது பார் இதயம் இறக்கை காணுது பார் !
&
-------சந்திர கலாதர்

No comments:

Post a Comment