Friday, February 10, 2012

மனநலம் இழந்த பெண்
 
&
 
பெண்ணே !
 
எங்கே உன் பார்வை தொலைந்து போகுது ?
 
எந்த சோகம் தன்னுள் மூழ்கி போகுது ?
 
எங்கே உன் மனது தேங்கிப் போனது ?
 
என்ன என்ன எண்ணம் எல்லாம் உன்னுள் குவியுது ?
 
அவற்றில் எது ஒன்று உன்னில் முறுவல் பூக்குது ?
 
எது ஒன்று உனைக் கோபம் தள்ளுது ?
 
எதுவம்மா  உன்னைச் சிரிக்க வைக்குது?
 
உன் உலகை உனக்காக நீ படைத்தாயோ ?
 
கடவுள் தந்த இவ்வுலகம் போதவில்லையோ ?
 
இவ்வுலகம் என்று தாயே நீ திரும்பப் போகிறாய் ?
 
ஏளனங்கள் இகழ்ச்சிகள் என்று விரட்டப் போகிறாய் ?
 
படைத்தவனிடம் என்னதான் பேசுகிறாயோ ?
 
பெற்றவளின் நெஞ்சம் இங்கு நொந்து போகுதே -
 
இந்த நோய்க்கு மருந்தேதும் உலகில்  இல்லையோ ?
 
 
---சந்திர கலாதர்          

--