மனநலம் இழந்த பெண்
&
பெண்ணே !
எங்கே உன் பார்வை தொலைந்து போகுது ?
எந்த சோகம் தன்னுள் மூழ்கி போகுது ?
எங்கே உன் மனது தேங்கிப் போனது ?
என்ன என்ன எண்ணம் எல்லாம் உன்னுள் குவியுது ?
அவற்றில் எது ஒன்று உன்னில் முறு வல் பூக்குது ?
எது ஒன்று உனைக் கோபம் தள்ளுது ?
எதுவம்மா உன்னைச் சிரிக்க வைக்குது?
உன் உலகை உனக்காக நீ படைத்தாயோ ?
கடவுள் தந்த இவ்வுலகம் போதவில்லையோ ?
இவ்வுலகம் என்று தாயே நீ திரும்பப் போகிறாய் ?
ஏளனங்கள் இகழ்ச்சிகள் என்று விரட்டப் போகிறாய் ?
படைத்தவனிடம் என்னதான் பேசுகிறா யோ ?
பெற்றவளின் நெஞ்சம் இங்கு நொந்து போகுதே -
இந்த நோய்க்கு மருந்தேதும் உலகில் இல்லையோ ?
---சந்திர கலாதர்
--
--